உண்ணாவிரத போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என கோரிக்கை முன்னெடுக்கப்பட்டுயாழ்ப்பாணம் நல்லூரில் றடைபெற்று  வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது பூரண ஆதரவை வழங்குவதாக  அறிவித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற குறித்த போராட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் தமது ஆதரவினை வழங்கி இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் எனவும்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.