சிறிலங்கா பிரதமர் யாழ். விஜயத்தின் போது கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ். விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அங்கு கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த 10,000 வீடுகளில் ஒரு பகுதி வீடுகள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இந்தியாவில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது. இந் நிகழ்வு ஞாயிறு காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

அத்துடன் அதற்கு முன்னர் காலை 10 மணியளவில் யாழ். செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டத்திலும் கலந்து கொள்வார். மேலும் கொழும்புத்துறையில் வீடமைப்புத் திட்டம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் கலந்து கொள்வார்.