அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்

உலக வல்லரசான அமெரிக்கா, ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை  இந்தியா உட்பட சில நாடுகள் இறக்குமதி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தது. இதைவிட ஈரானின் வளைகுடா எல்லைப் பகுதியில் இரு நீர்மூழ்கிக் கப்பல்களை  நிறுத்தி வைத்திருந்தது. அதனால் எப்போதும் போர் மூழலாம் என்ற நிலை உலக நாடுகளில் இருந்து வந்தது.

இதேவேளை அமெரிக்கப் போர்க் கப்பல்களை தாம் மூழ்கடித்து விடுவோம் என ஈரான் அமெரிக்காவையே மிரட்டி வருகின்றது.

இந்த எச்சரிக்கை நாடுகளிலிருந்து இந்தியாவை நீக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் ஜேர்மனி, சீனா, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய முக்கிய நாடுகளுடன் இந்தியாவும் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது.  தற்போது இந்தியா ப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.