பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று  கொஸ்லந்தை நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest 4 1 பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களைப் போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.