சிறீலங்காவில் 189,349 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது – நோயில் தடுப்பு பிரிவு தகவல்

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை 189,349 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயில் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  அதே நேரம், 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதே வேளை இலங்கையில் உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகையை விட உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.93 கோடியைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.