P2P போராட்டம் அவசரமாக ஒழுங்கு செய்ததால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம்-தவத்திரு வேலன் சுவாமிகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தவத்திரு வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “  அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை சொல்கிறார்கள்.

அதிலெல்லாம் உண்மைகள் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு பலம் சேர்த்தது” என்றார்.