இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 57,000க்கும் அதிகமானோர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 293 ஆக காணப்படுகின்றது.

இதில் 5 ஆயிரத்து 821 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, 313 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.