கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு கனடா பிரம்ரன் நகரசபையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழித்ததை தொடர்ந்து உலகம் எங்கும் எதிர்ப்புக்கள் தோன்றியிருந்தன.

இந்த நிலையில் உலகம் எங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் முள்வைக்கப்பட்ட நிலையில் தற்போது கனடாவில் அதற்கான முயற்சி இடம்பெற்றுள்ளது.