ஈஸ்டர் தாக்குல் தொடர்பில் 32 பேருக்கு எதிராக வழக்கு – சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகள் நிறைவு பெற்ற 08 ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சுமார் 241 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்