ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடூழிய சிறை – சந்திரிகா குமாரதுங்க அதிர்ச்சி, ஆச்சரியம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு தான் ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

“சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை சோர்வடைய வேண்டாம் என்றும், நீதியை மதிக்கும் நபர்கள் அவருடன் இருக்கின்றமையால் எந்தவிதமான சலனத்தையும் எதிர்கொள்ளவேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார்