நினைவாலயம் இடிப்பு – கனடாவில் வாகனப் பேரணி

சிறீலங்கா அரசும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து கடந்த சனிக்கிழமை (9) முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அழித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமகாக நேற்று (10) கனடாவில் வாகன பேரணி ஒன்று இடம்பெற்றது.

பிரம்டன் நகர மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி, ரொறொன்டோ நகர மண்டபம் மற்றும் குயின்ஸ் பார்க் பகுதியை சென்றடைந்தது. இதில் கனடாவில் வாழும் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

சிறீலங்காவின் இந்த நடவடிக்கைளை கண்டித்து கனேடிய அரசியல்தலைவர்கள் பலர் கருத்துக்கi வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என பிரம்டன் நகரத்தின் முதல்வர் பற்றிக் பிரவுண் தெரிவித்திருந்தார்.