இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 215 ஆக அதிகரிப்பு – நேற்றைய தினம் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்தனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக பதிவான இரு மரணங்களும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஆண்கள் என்றும் அவர்கள் 71 மற்றும் 86 வயதுடையவர்கள் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் 37 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.