அமெரிக்கா, பிரித்தானியா இணைந்து ஜெனீவாவில் புதிய பிரேரணை – களப் பணி ஆரம்பம்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள மனித உரிமைகள் கவுன்ஸிலின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்று கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் பிரிட்ட னும் இணைந்து இதற்கான ஆரம்பகட்ட களப் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன என்று “சண்டே ரைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இலங்கைக்கு எதிராக ஒரு புதிய தீர்மானத்தைச் சமர்ப்பிப்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.