மாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனை – இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு

ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுன முன்னணியின் மகளிர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவையில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.