ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கூறும் படம்

ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம், ”சினம் கொள்”  இப் படம் குறித்து அவர் கூறுகையில், ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இப்படத்தைத் தயாரிக்க நிதியுதவி செய்தனர்.

போருக்குப் பின்னரான இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசுகிறது. 6வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று, வெளியே வரும் நபராக ஆண்டவன் கட்டளை அரசிந்தன் நடித்துள்ளார்.

சென்சரில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் “U”  சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜுலையில் இந்தப்படம் வெளிவருகின்றது என்றும் அவர் கூறினார்.