உலக பார்வை தினத்தை முன்னிட்டு (World Sight Day 2020.) கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவன் தலைமையில் இந்த வாரம், யாழ். போதனா வைத்தியசாலையில் 273 பேருக்கு வெண்புரை (Cataract Surgery ) சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமது கடமைகளுக்கு மேலதிகமாக இந்த விசேட சிகிச்சையை Corona தடுப்பு ஆயத்தங்களோடு நடத்தி முடித்த அனைவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ் சத்தியமூர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.