இந்தியாவை உதவிக்கு அழைத்த சிறீலங்கா – தீ அணைக்கப்பட்டது

சிறீலங்காவின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணைக்கப்பலை மீட்பதற்கு இந்திய கடற்படையின் உதவியை சிறீலங்கா கோரியதுடன், இந்தியாவின் 3 கடற்படை கப்பல்கள் உதவி வழங்கியுள்ளன.

சிறீலங்காவின் அழைப்பை ஏற்று தனது கடற்படை கப்பல்களான சாயுரா, சாரங் மற்றும் சமுத்ரா ஆகியவற்றுடன் டொநியர் வரை கடற்படை விமானமும் சிறீலங்கா கடற்படையினருக்கு உதவிகளை வழங்கியிருந்தது.

இந்திய கடற்படையினரின் உதவியுடன் தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

image 635ca13fd6 இந்தியாவை உதவிக்கு அழைத்த சிறீலங்கா - தீ அணைக்கப்பட்டது