பாதுகாப்புடன் தொடர்புள்ள காணிகளுக்கு பதிலாக வேறு அரச நிறுவன காணிகளை வடக்கு விவசாயிகளுக்கு வழங்குவது உண்மையான நல்லிணக்கத்திற்கு உந்துசக்தியாக அமையும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை பனை அபிவிருத்தி சபையினூடாக வடக்கு பனை விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சர் விமல் வீரவங்சவின் முன்னிலையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,…
முதற்கட்டமாக 200 ஏக்கர் காணி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மேலும் 6000 ஏக்கர் காணியை வடக்கு விவசாயிகளுக்கு எள், பாசிப்பயறு கவுபி வெங்காயம் , பயிரிடுவதற்காக வழங்க எதிர்பார்க்கிறோம். இறக்குமதியில் தங்கியுள்ள மஞ்சள், உளுந்து பயிற்செய்கையில் ஈடுபட வடக்கு விவசாயிகளை ஊக்குவித்தால் அவர்களின் உற்பத்திக்கு உயர்ந்த கேள்வி ஏற்படும்.
வடக்கி கிழக்கிலுள்ள அதிகமான மக்கள் விவசாயம் பனை கைத்தொழில் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத்திற்கு காணி இல்லாமை அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரதான பிரச்சினையாகும்.இந்த பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்