கோவிட்-19 – சிறீலங்காவில் 879 பேர் பாதிப்பு

சிறீலங்காவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879 ஆக இன்று (12) அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று புதிதாக 10 பேருக்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டவர்களில் 9 பேர் சிறீலங்கா கடற்படையினர் ஆகும்.

சிறீலங்காவில் பெருமளவான கடைற்படையினர் நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் சிறீலங்கா அரசு எண்ணிக்கையை மறைப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.