நோயாளர் எண்ணிக்கை 804 ஆக அதிகரிப்பு – சீனா மேலும் உதவி

சிறிலங்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்ந்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு இன்று (7) தெரிவித்துள்ளது.

இன்று நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 6 பேர் சிறீலங்கா கடற்படையினர்.

இதனிடையே, சிறீலங்காவுக்கு 30,000 பி.சி.ஆர் கொரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்களையும், 15,000 பாதுகாப்பு உபகரணங்களையும் சீனா அனுப்பியுள்ளதாக சிறீலங்காவில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவுக்கு சீனா உதவியாக வழங்கும் மருத்துவ உபகரணங்களில் இது மூன்றாவது தொகுதியாகும்.