44 கடற்படையினர்; உடன் தனிமைப்படுத்த நடவடிக்கை.

விடுப்பில் வீடு சென்றுவிட்டு மீண்டும் பணிக்காக கடந்த 21 ஆம் திகதி முல்லைத்தீவுக்கு திரும்பிய 44 கடற்படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவில் பணியாற்றிய 44 கடற்படையினர் விடுப்பில் வீடு சென்றுவிட்டு மீண்டும் பணிக்காக கடந்த 21 ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.

வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.