பொதுத்தேர்தல் திகதியை தற்போது நிர்ணயிக்க வேண்டாம் – கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.