இலங்கைத்தீவில் இம்முறை சித்திரை புத்தாண்டு..?

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை போல இவ்வருடம் எந்தவொரு நிகழ்வும் இல்லை.

கொரோனா தொற்றின் தாக்கமே இதற்கான காரணமாகும்.

புத்தாண்டில் கிராமங்களுக்கு செல்லும் மக்களின்றி கொழும்பு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஏனைய புத்தாண்டு நாட்களைப் போலன்றி இன்று கொழும்பு பிரதான பேருந்து நிலையம், சேவையின்றி நிறுத்தப்பட்ட பேருந்துகளுடன் காணப்படுகிறது.

அதேபோல, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு புகையிரதம் கூட பார்வைக்கு தென்படாமல் இருக்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக ஆடை வியாபாரிகள், பட்டாசு விற்பனையாளர்கள், இனிப்புக்கள் மற்றும் பானை தாயாரிப்பாளர்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.