கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு பயணிகள் வர தடை

ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக யாழ். சர்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.