கூட்டணிக்குள் எந்தப் பிளவும் இல்லை

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் எந்தப் பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்படி கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு 12ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும். அத்தோடு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுத் தேர்தல் பரப்புரை வரும் 15ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்படும்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் பிளவு என்று ஊடகங்களில் வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளுடன் பேசி தகுந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என்றார்.