இந்தியாவின் பிடிக்குள்ளிருக்கும் இலங்கையின் விவசாய உற்பத்தி-கோ.ரூபகாந்

ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில் அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களினால் அதன் பொருளாதார நிலைமைகள் மாததிரமின்றி அரசியல் சமநிலையற்ற செயற்பாடுகளும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளமை தற்போது அறியப்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிலை மிகவும் கீழ் இறங்கிய நிலையில் காணப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் நிறைபெற்றிருந்தது. குறித்த தேர்தலுக்கான செலவீனங்களை ஈடு செய்வதில் ஏற்பட்ட நிதி நிலைமைகளை சீர் செய்வதற்காக பல்வெறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெறப்பட்டு வேலைத்திட்டஙகளும் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே இவ்வாண்டு தேர்தல் ஆண்டாக பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தல்களை வைத்தேயாகவேண்டிய நிலையில் புதயி அரசு தள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியோக இருந்த போது சர்வதேச ரீதியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய காலமும் எதிர்வரும் ஆண்டுகளாகவே உள்ளது.

2021 முதல் 2024 என்பது கடனை அதிகளவில் செலுத்தும் காலப்பகுதியாக பொருளியலாளர்களாலும் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த பொருளாதார சுமையை எவ்வாறு நாட்டு மக்கள் ஈடு செய்யப்போகின்றர் என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.

ஏற்கனவே அரச ஊழியாகளின் சம்பள அதிகரிப்பு தொடுர்பான வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுவது எனவும் புதிய ஒரு லட்சம் வேலை வாய்ப்பை வழங்குவதிலும் புதிய அரசு பல சாவால்களை முகங்கொடுக்கவுள்ள நிலையிலேயே தேர்தல்களை சந்திக்க நேர்கின்றது.

வெறுமனே பாராளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு வாக்குறுதிகளை வழங்குவதில் புதிய அரசு காட்டி வரும் சிரத்தை தேர்தலின் பின்னரான காலத்தில் எவ்வாறு நிறைவேற்றுவது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை தற்போது வெளிநாட்டு பணியாளர்களின் மூலமான பிரதான வருமானத்தில் தங்கியுள்ள நிலைக்கு சென்றுள்ளமையானது பெரும் துர்ப்பாக்கியமாகவே பார்க்கப்படுகின்றத.agrecul இந்தியாவின் பிடிக்குள்ளிருக்கும் இலங்கையின் விவசாய உற்பத்தி-கோ.ரூபகாந்

தேயிலை,இரப்பர் கொக்கோ போன்றவற்றினை பிரதான வருமானக கொண்ட இலங்கை பெருந்தோட்ட காணிகளை மக்கள் குடியியிருப்புக்களாகவும் குடியேற்றங்களாகவும் மாற்றதியன் விளைவே வெளிநாடடு பணியாளர்களின் வருமானத்தினை பிரதான வருமானமாக பார்க்க வைத்துள்ளது.எனவே இலங்கை போன்ற சிற்ய நாடுகள் எதிர்கால நிட்டமிடல் இன்றி நாட்டில் செயற்படுததும் ஒவ்வொரு நகர்வும் அதன் பொருளாதார ஸ்திரதன்மையை சீர்குழைக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே இவ்வாறான நெருக்கடிகள் குடிமக்களை நிதியியல் ரீதியில் பாதிப்படையச்செய்யும் போதே மக்கள் அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த முனைவர். அதற்கான சூழல் இலங்iகில் மிகவும் அண்மித்துக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றபோது பாராளுமன்ற தேர்தலுக்கான செவீனங்களை எவ்வாறு புதிய அரசு ஈடு செய்யவுள்ளது என்பதே தற்போதைய கேள்வியாகும்.

உலக வங்கியின் தகவலின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார செயற்றிறன் திருப்திகரமானதாக அமைந்ததாக கூட்டிக்காட:டுவதுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் எனவும் தெரிவித்திருந்தது, இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட 7.6 என்ற நிதிப்பற்றாக்குறை 2016 ஆம் அண்டில் 5.4 சதவீதமாக குறைவடைந்திருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்ட வரட்சியினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட தாக்கம் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக குறைவடைந்திருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான ஏற்ற மற்றும் இறகக் நிலையிலான பொருளாதார நிலைமைகளை கட்டுப்படுத்தி உள்ளுர் உற்பத்தியை பெருக்கும் வேலைத்திட்டத்தினை தற்பேயை அரசு செயற்படுத்த முனைகின்றது.

பல விவசாய உற்பத்தி பொருட்களுக்கான இறக்குமதி தடை ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் உள்ளுரில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக என்பதனை சிந்திக்க வேண்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வெளியிட விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு வருவதற்கான தடைவிதிக்கப்பட்டிருந்தமையினால் உள்ளுர் விவசாய உற்பத்தி பெருக்கம் அதிகமாக காணப்பட்டது. தன்னிறைவான விவசாயம் காணப்பட்டது.tamil eelam defacto state 9 இந்தியாவின் பிடிக்குள்ளிருக்கும் இலங்கையின் விவசாய உற்பத்தி-கோ.ரூபகாந்

உணவு பொருட்களினால் அங்கிருந்த மக்கள் எவ்வித பாதிப்புக்களையும் எதிர்கொள்ளதாததுடன் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான விலைகளும் மிகவும் குறைவான நிலையிலேயே காணப்பட்டது.

இதேபோன்றதான நிலையையே தற்போது இலங்கை கையாள நினைக்கின்றது. குறித்த செயற்பாடு வரவேற்கத்தக்கதாக காணப்பட்ட போதிலும் விவசாய நிலங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றங்களும் நீர் நிலைகளில் மக்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும் இலங்கையின் விவசாய துறையிலான வளர்ச்சிக்கு பங்கமாகவே அமைய வாப்புக்ளதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையிலேயே இலங்கiயின் அண்மைய நாடான இந்தியாவிலும் 2019 ஆம் அண்டு பொருளாதார வளர்ச்சிய சரிவை நோக்கி சென்றதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிய 7 வீதமாக இருக்கும் என கணித்த ரிசேர்வ் வங்கி தற்போது வளர்ச்சி விதம் 6.9 வீதத்தைவிட குறைவாக்கும் என தெரிவித்துள்ளது. இந் நிலையில் பொருhளதார ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.2 வீதத்தை தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.

எனவே அண்மைய நாடுகளில் அதிலும் இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஏறட்படுள்ள தாக்கங்கள் இலங்கையின் அரசியல் கட்டமைப்பினூடாக அதன் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த வாப்புள்ளது.

இந்தியா அதனது பொருளாதார வளர்ச்சி விதத்தினை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களில் அவதானம் செலுத்தி வரும் நிலையில் அங்கிருந்து இலங்கைக்கு பிரதானமாக இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான இறக்குமதி தடையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது . எனவே குறித்த தடையினை நீக்க வேண்டிய அல்லது மறைமுகமாகவேனும் அனுமதி வழங்க வேண்டிய நிலைக்கு இரங்கை அரசு தள்ளப்படும்.

இவ்வாறான சூழலில் தன்னிறைவு விவசாய உற்பத்தியினை இலங்கை காணுவதற்கான வர்புக்கள் குறைவடைகின்ற போது பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படத்த முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இந் நிலையில் இவ்வாறான நிலைமைகளை சீர் செய்வதற்கான வாப்பு எந்த அரசு ஆட்சிப்பீடம் ஏறினாலும் மக்களுக்கு தீர்வு என்பது எட்டாக்கனியாகவே போகும்.