தமிழ் மக்களிடம் அதிக பணம் அறவிடும் யாழ் விமான நிலையம்

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்ட புதிய அனைத்துலக விமான நிலையம், தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றபோதும், அது தமிழ் மக்களிடம் அதிக பணத்தை அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானப் பயணம் ஒரு மணி நேரமும், 20 நிமிடங்களும் கொண்டது அதற்கான கட்டனம் 24,531 ரூபாய்கள், ஆனால் 33 நிமிடங்கள் எடுக்கும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை 32,823 ரூபாய்களாகும்.

சிறீலங்கா அரசினதும், அதிகாரிகளினதும் இந்த பாரபட்ச நடவடிக்கையினால் தமிழ் மக்கள் கொழும்பு சென்றே சென்;னைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையானது யாழ் விமானநிலையத்தை விரைவில் மூடும் நிலைக்கு கொண்டுவரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, பலாலி அனைத்துலக விமான நிலையத்தை மேலும் தரமுயர்த்தும் நடவடிக்கைக்கு 300 மில்லியன் ரூபாய்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.