உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று(17) மாலையில் இருந்து மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆணைக்குழு, வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையினை கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

மேலும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரை 39பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது