கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அனுமதியற்ற கரையோர கட்டுமானங்கள், கடலரிப்பு பிரச்சினைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



