வடமராட்சி கடலில் அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள பருத்தித்துறை – முனை பகுதியை சேர்ந்த சுமியோம்பிள்ளை சுஜிக்குமாரின் இரு பிள்ளைலகளின் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பேற்றுள்ளது.
பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை.
இந்நிலையில் அவர்களில் ஒருவரான முனையை சேர்ந்த சுமியோம்பிள்ளை – சுஜிக்குமாரின் இரண்டு பிள்ளைகளான க.பொ.த. சாதரண தரம் மற்றும் நான்காம் ஆண்டு கல்வி கற்றுவரும் இரு மாணவர்களும் கல்வியை தொடரும் வரை முழுமையான கல்வி செலவினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பேற்றுள்ளது.
பருத்தித்துறை கோரியடி பகுதியில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




