முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



