ஈரானிய எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை மீண்டும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த தாக்குதல் நடவடிக்கை மேலும் 10 இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தமது ட்ருத் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



