இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு விசேட அறிவுறுத்தல்

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே இலங்கைக்கான பயண ஆலோசனை தற்போது நிலை 2 என்ற மட்டத்தில் உள்ளது.
அத்துடன், மாற்றுப் பயண வழிகளை எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக, இலங்கை அரசாங்கம் 14 நாட்கள் இலவச விசா நீடிப்பை வழங்குகிறது.

அதேநேரம், விமானப் பயணம் தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பான உதவிகளுக்கு இலங்கையின் சுற்றுலாத் துறை அவசர அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த அறிவிப்பு ஒரு ‘பயண ஆலோசனை’ அல்ல என்பதும், தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்திற்கொண்டு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு என்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.