”அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் தலைவர்கள், தளபதிகள் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தனர். தங்கள் தளபதிகள் இல்லாத நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன” என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
”இடைக்கால தலைமைக்குழு எடுத்த முடிவு ஆயுதப்படைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல், அண்டை நாடுகளிடமிருந்து எங்களை தாக்கினால் மட்டுமே அவர்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டும். இதை தூதரக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”



