இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு இன்று (11) நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் மற்றும் அதற்கான புதிய சட்ட வரைவு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சம உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.



