தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாது சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பதிவு செய்யப்படாது என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

10ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.