யாழ். ஊர்காவற்துறையில் காவல்துறையினரால் 17 வயதுப் சிறுவன் சுட்டுப் படுகொலை

இன்று அதிகாலை(10.02.2026) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை குறித்த சிறுவன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை வீதி கடமையில் இருந்த காவல்துறையினர்  அவர்களை வழி மறித்தனர். காவல்துறையினரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால்  காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியை சேர்ந்த குறித்த சிறுவன் பலியாகியுள்ளார். அவருடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.