இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் மீன்பிடி படகையும் மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.



