டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார். மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் எதிர்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க, பயிர் செய்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மேலும் தெரிவித்தார்.



