தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என ‘சர்வதேச சிறுபான்மையினக்குழு’ எனும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு தேசிய மக்கள் சக்தி வசமிருப்பதாகவும், அதனை உருவாக்கும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.



