ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை பகுதி புத்தர் சிலை விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் அண்மையில் புதிய புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர்தரப்பில் எவரும் முன்னிலையாகாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன் பின்னரே வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.