இனனாதப் பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கயர்கள் தான் என்ற நிலைமையை உணரவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிரங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம் தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது. இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நமது இனத்தையே அவர்கள் முன்னிலைப்படுத்தினர். இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையால் தான் நாட்டில் போர்கூட ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள் தான் அன்று யாழ். நூலகத்தை எரித்து நாட்டை நாசமாகினர். 94 ஆயிரம் புத்தகங்களை கொளுத்திய பாவிகள் அவர்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எமது ஜனாதிபதி நாட்டில் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிவருகின்றார். பிரதமரும் அவ்வாறு தான் சிறப்பாக செயல்படுகின்றார். இலஞ்ச, ஊழல் மோசடிகளிலிருந்து நாடு இன்று மீண்டு வருகின்றது. தேசிய ஒற்றுமையையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அரசாங்கம் அப்புணிப்புடன் செயற்படுகின்றது. அதனால் தான் வடக்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – என்றார்.
கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


