இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பீல்ட் மார்சல் (Field Marcel) சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நாள் வாசிப்பு மீதான வாவாதத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் பெரும் மனித பேரவளம் இடம்பெற்றுள்ளது.
மத்திய முகாம் என்ற இடத்தில் கோணேஸ்வரி என்ற தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடு கொலை செய்யப்பட்டார். அதேபோல சாராதாம்பால் என்பவர் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டார்.
மேலும் கிரிசாந்தி சுண்டுக்குளியில் கொலை செய்யப்பட்டார்.
அடுத்ததாக இசைப்பிரியா என்ற ஊடகர் பாலியல் அத்துமீறலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். இந்தநிலையில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா சுயாதீனமாக சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டினார்.
அந்த கருத்துக்களின் அடிப்படையில் , இசைப்பிரியாவின் கொலைக்கு காரணமாக இருந்தவர் ஒரு புலனாய்வு பணிப்பாளர் என்றும், ஜகத் ஜயசூரிய என்பவரையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்த சாட்சியம் இறுதி யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவ தளபதி ஒப்புதலில் வழங்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சுட்டிக்காட்டி இருந்தார்.



