நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்…

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று(24)  ஜெனீவாவுக்கு  பயணம் மேற்கொள்கிறார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழுவின் 29ஆவது அமர்வில் இம்முறை இலங்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நடைபெறுவுள்ளதுடன் இதன்போது இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைமை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்படும்.

இலங்கை தொடர்பாக நாளைமறுதினம் (26) மொத்தம் ஆறு மணி நேரம் மதிப்பாய்வு செய்யப்படும்.
அத்துடன் அந்தந்த நாடுகளில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை விசேட குழு ஒன்று இதன் போது முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.