சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள் – ஊழல் விசாரணை ஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட  இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதியன்று 2024 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர் விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பெயர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஆறு பேர்,முன்னாள் மாகாண ஆளுநர்கள் நால்வர்,முன்னாள் தூவர்கள் 29 பேர்,மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 2 நீதியரசர்கள் உள்ளடங்குகின்றனர்.

குடந்த கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறித்த காலப்பகுதிக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சரான (காலஞ்சென்ற)லொஹான் ரத்வத்தே, மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சாந்த பண்டார,காதர் மஸ்தான்,பிள்ளையான் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

அத்துடன் முன்னாள் மாகாண ஆளுநர்களான ரொஷான் குணதிலக, செந்தில் தொண்டமான்,நவீன் திஸாநாயக்க மற்றும் விலியம் கமகே ஆகியோரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.