திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள், திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (20) முன்னெடுத்தனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்.
‘பொய்கள் வேண்டாம், விவசாயிகளை இப்படியா நடாத்துவது’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் முத்து நகர் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு சிங்கள அமைப்பான மக்கள் போராட்ட முன்னணியும் ஆதரவை வழங்கியுள்ளது.
முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இந்த சத்தியக் கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நேற்று (19) இடம் பெற்ற நிலையிலும் கூட இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.