வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவின் அமர்வில் இலங்கை தொடர்பில் மதிப்பாய்வு செய்ய திட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு அதன் 29வது அமர்வை செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடத்தவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.
இந்த அமர்வானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பொதுக் கூட்டத்துடன் ஆரம்பமாகும்.

வலிந்து காணாமல் போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் 77 அரசுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்தநிலையில் இம்முறை இலங்கை உள்ளிட்ட 3 அரசுகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.
அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து அந்தந்த நாட்டு அறிக்கைகள் மற்றும் பிற சமர்ப்பிப்புகளைப் பெற்றுள்ள விசேட குழு, இலங்கை தொடர்பான மதிப்பாவின் போது அவற்றை சமர்ப்பிக்கும்.