இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணி!

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

இது பற்றிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று இரண்டு நாட்களாக கட்டாரில் நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியக மேலும் அலோசனைக் கூட்டங்கள் இடம்பெறும் எனவும் புதிய இராணுவ கூட்டு அணி அமைக்கப்படும் எனவும் சவுதி அரேபியாவின் என்பிசி செய்திச் சேவை (nbcnews) தெரிவித்துள்ளது. இக் கலந்துரையாடலில் சவுதி அரேபியா முக்கிய பாங்கு வகிப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.