முறைமை மாற்றமே தேர்தல் தாமதத்துக்கு காரணம் என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் .

“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.” என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அவர் யாழ். ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார். எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது.
இது தீர்க்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடைபெறும். அதற்குத் திணைக்களம் தயாராக இருக்கின்றது.
அல்லது பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையூடாக தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.