சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுநாள்..

Unknown சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுநாள்..

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 – 09 ஆம் திகதி வரையான நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் எனப் பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை.